ஜெனரல்
-
data-chart
சமுர்த்தி கொடுப்பனவுகளுக்கான அரசாங்க செலவினம்

2020 ஆம் ஆண்டில், சமுர்த்தி நிவாரணக் கொடுப்பனவுகளுக்காக அரசாங்கமானது ரூபா 52.5 பில்லியனை செலவிடுகிறது - வறுமையில் உள்ள மக்களுக்கான மிகப்பெரிய சமூக நலத்திட்டம். ஒரு பயனாளிக்கான கொடுப்பனவுகளின் அளவு அதிகரிக்கப்பட்டதால், சமுர்த்தி மீதான அரசாங்க செலவுகள் 2015 இல் கணிசமாக அதிகரித்தன.

2020 ஆம் ஆண்டில் இலங்கையில் 1.8 மில்லியன் பயனாளிகளுக்கு சமுர்த்தி நிவாரணம் விநியோகிக்கப்படுகிறது.

2020 இல் அரசாங்கமானது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஒரு பங்காக 0.35%  சமுர்த்தி நிவாரணக் கொடுப்பனவுகளுக்காக செலவிட்டது. 2006 ஆம் ஆண்டிலும், அரசாங்கமானது 0.37% ஐ சமுர்த்தி கொடுப்பனவுகளுக்காக செலவழித்தது, இருப்பினும் தொடர்ந்து வந்த காலங்களில் 2015 வரை  சமுர்த்தி கொடுப்பனவுகள் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு ஏற்ப அதிகரிக்கவில்லை

2020 இல், அரசாங்கமானது  சராசரியாக ஒரு குடும்பத்துக்கு  ரூபா 2,428 ஐ சமுர்த்தி கொடுப்பனவாக வழங்குகிறது. ஒரு குடும்பத்திற்கான கொடுப்பனவுத் தொகை, அதன் வருமானத்தின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது.

2021-08-05
0 கருத்துக்கள்
கருத்தொன்றை பதியவும்